தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். "காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். "காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். "காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

தூத்துக்குடி தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 351(3), 352, 353(2) BNS என்ற மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காலை 7:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கூட்டி வந்த நிலையில், மாலை 6:30 மணிக்கு தான் விசாரணை முடிவு பெற்று இருக்கிறது. சுமார் 11 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்து உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு வந்து பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்..

தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் மேஜிஸ்ட்ரேட் சுமதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்கள் ஜான்அலெக்சாண்டர், பாபு செல்வன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.. இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டு வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்திரேட் சுமதி தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 15 நாள் அதாவது ஆகஸ்ட் 3 ந் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார்..

     இதனைத் தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் நீதிமன்ற வாயிலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்., தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. இந்த மாதிரி ஒரு நிலையை பார்த்ததில்லை. ஏதாவது பேசினார்கள் என்றால் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அந்த நிலைதான் இருந்து வந்தது.. என்ன பேசினாலும் ஆளும் கட்சி ஆட்சி பற்றியோ முதலமைச்சர் பற்றியோ எதுவும் பேசக்கூடாது என்று கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். பத்திரிக்கையாளர்கள் மீது எந்த மரியாதை காட்டப்பட்டது என்று வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைதான்.. எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் குற்றச்சாட்டு என்ற பெயரில் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். உதாரணமாக காலை கைது செய்யப்பட்டோம். 32 பெண்கள் இருந்தோம்.. 9:20க்கு தான் விடுதலை செய்கிறார்கள். ஆறு மணிக்கு மேல் பெண்களை கைது செய்யக்கூடாது என்பது விதி., ஆனால் 9:20க்கு தான் விடுதலை செய்கிறார்கள்.. தீர்ப்பு முடிந்தால் தான் விடுதலை செய்ய வேண்டுமாம்.. எவ்வளவு ஒரு அடக்குமுறை என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.. "காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று ஆட்டம் ஆடுகிறார்கள்.. தமிழ்நாடு வளர்ச்சி அடைய செய்த ஒரு கட்சி திமுக., அதன் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருக்கின்றார் மார்க்கண்டேயன். மக்கள் பிரதிநிதி, இரண்டு லட்சம் வாக்காளர் கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற பிரதிநிதி., மக்களால் தேர்ந்தெடுத்தப்பட்டவர் அவர்., எதற்குமே மரியாதை இல்லை.. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது இந்த தவெக அரசு என்று கூறினாா்.