திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்

திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்

திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்

      தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு புதிய பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில் 3ம் மைல் எப்சி ஐ குடோன் பகுதியில் அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில் கடந்த 2006 திமுக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகர மக்களின் நலனை கருதி பக்கிள்ஓடை திட்டத்தை துவக்கி 2008ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலங்களில் மாநகராட்சி பகுதியில் பெய்யக்கூடிய தொடர் கனமழை காரணமாக மழை வெள்ளநீர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாக கடலில் வழிந்தோடி வருகிறது. கடந்த 2015 மற்றும் 2023 வருடங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் இருந்து பக்கிள் ஓடைக்கு பெருமளவிலான மழை நீர் குறைந்த அகலம் உடைய பக்கிள் ஓடைக்கு வர முடியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளில் உட் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது இந்நிலையில் 2021ல் பெய்த பெரும் மழையின் காரணமாக தூத்துக்குடி முத்தம்மாள் காலணி ராம்நகா் பிரையண்ட் நகா் அம்பேத்காா் நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படைந்த காலக்கட்டத்தில் எதிா்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நோில் வந்து பாா்வையிட்டாா். பின்னா் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதலமைச்சா் ஸ்டாலின் உள்ளாட்சி தோ்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு நான் மேயரான பின்பு தூத்துக்குடி பகுதி மழை வௌ்ள பாதிப்பை மக்கள் இனி வரும் காலங்களில் பாதிக்காத வகையில் திட்டங்களை தயாாித்து செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியதின் போில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட இடங்களில் புதிதாக 14 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு அந்த பகுதியில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 100 ஆண்டுகளில் பெய்யாத கனமழை பெய்த நேரத்தில் பல பகுதிகளில் 40 நாட்கள் வரை மழை நீர் தேங்கியிருந்த காலம் மாறி இந்த வழித்தடங்கள் உருவாக்கப்பட்டதின் காரணத்தாலும் பல்வேறு போா்கால நடவடிக்கை எடுக்கப்பட்டதின் மூலம் 10 நாட்களில் சகஜ நிலைக்கு எல்லோரும் வரும் நிலையை மாநகராட்சி நிா்வாகம் உருவாக்கியது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நேரங்களில் மழை வெள்ளநீர் எளிதாக பக்கிள் ஓடைவழியாக கடலுக்கு செல்லும் வகையில் பக்கிள் ஓடையின் அகலத்தை கூடுதலாக 5 மீட்டர் அளவில் அகலப்படுத்தி எப்.சி.ஐ குடோன் முதல் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கு ரூ. 5370.00 லட்சம் மதிப்பீட்டில் ஓதுக்கீடு செய்து 7.5 கிலோமீட்டா் தூரம் நடைபெறும் அகலப்படுத்தும் பணி ஜனவாி 2026ல் துவங்கியுள்ளது. இதன் பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய் பைப்லைன்களும் இருந்து வருகிறது. விாிவாக்கம் செய்யும் போது அதிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதையும் சீா்படுத்தி அந்த பணி தூாிதமாக நடைபெற்று வருகிறது இந்த பணி முழுமையடைவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 8 மாதங்கள் வரை நீடிக்கும் அப்பணி நடைபெறும் போது 30 சென்டிமீட்டா் வரை கனமழை பெய்தாலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா். 

      ஆய்வின் போது மாநகராட்சி உதவி பொறியாளா் லெனின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.