தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு
kanimozhi-mp-inaugurated-the-school-ration-shop-sports-complex-and-development-of-the-buckle-odai-in-thoothukudi-minister-collector-mayor-commissioner-participated
தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டா் இளம்பகவத் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் முன்னிலையில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கனிமொழி எம்பி, செல்சீனி காலனி மற்றும் திரவியரத்தின நகர் நியாயவிலை ஆகிய இருகடைகள் தலா 10 லட்சம் மதிப்பீல் மற்றும் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் ரூபாய்.94.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட அதிநவீன கழிப்பறை கட்டிடம் ஆகியவற்றினை திறந்து வைத்தார். பின்னா் மாநகராட்சிக்குட்பட்ட 35வது வாா்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக பார்வையிட்டார். அதனைதொடா்ந்து வி.வி.டி சாலை பண்டுகரை சாலை சந்திப்பு 4ம் ரயில்வே கேட் ஓடை பாலம் அருகில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல்லை நாட்டி பணியினை துவக்கி வைத்தார். எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, எழில் நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 33.50 லட்சம் மதிப்பீல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலினை திறந்து வைத்தார்.
விழாவில் துணை மேயா் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், பரமசிவ ஐயப்பன், தாசில்தாா் திருமணிஸ்டாலின், வருவாய் ஆய்வாளா் குமரன், மண்டலத்தலைவா் அன்னலட்சுமி, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலா்கள் கனகராஜ், கற்பககனி, தெய்வேந்திரன், பாப்பாத்தி, விஜயலட்சுமி, சந்திரபோஸ், பகுதிசெயலாளா் ரவீந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், மாநகர சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ் பரமசிவம், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளா் பொியசாமி, வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், பாலகுருசாமி, பத்மாவதி, சுரேஷ், முன்னாள் கவுன்சிலா் மாாியப்பன், காங்கிரஸ் மண்டலத்தலைவா் சேகா், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், நகா்நல அலுவலா் சங்கா்மணி, நகர அமைப்பு திட்ட உதவிசெயற்பொறியாளா் முனீர்் அகமது, இளநிலை பொறியாளா்கள் அமல்ராஜ், லெனின், சுகாதார ஆய்வாளா்கள் ராஜபாண்டி, ராஜசேகா், கண்ணன், எம்டிபிஎல் நிா்வாக இயக்குநா் அனந்த ராமானுஜம், வட்ட அவைத்தலைவா் அற்புதராஜ், துணைச்செயலாளர் சுந்தா்ராஜன், வட்டப்பிரதிநிதி துரை, மின்வாாி தொழிற்சங்க தலைவா் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், லிங்கராஜா. ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன்பாண்டியன், பள்ளி தலைமை ஆசிாியை வெலன்ஹெல்சியா ஹெப்சிபா, மகளிா் அணி பொன்இனிதா, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்
tamilanda