பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
minister-geethajeeva-spoke-at-the-women's-day-celebration,-saying-that-parents-should-monitor-and-guide-both-male-and-female-children-equally.
பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி உலக மகளிா் தின விழாவை யொட்டி தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் அனைத்து மகளிா் குழுக்கள் சாா்பில் நடைபெற்ற விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்
தூத்துக்குடி தொகுதியில் நடைபெறுகின்ற விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்து கொள்கிறேன். நம்முடைய உாிமையை கேட்டுப்பெறுவதற்காக பெண்கள் படிப்பு வேலை பல்வேறு பொறுப்புகளுக்கு வரவேண்டும் என்று நினைத்த காலக்கட்டத்தில் தந்தை பொியாா் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வழங்க வேண்டும் என்று விடுத்த கோாிக்கையைடுத்து 1989ல் கலைஞா் அதை சட்டமாக்கினாா். பெண்களை சமையல் வேலையில் மட்டுமே முடக்கப்பட்டிருந்த காலம் மாறி இப்போது எல்லாத்துறையிலும் பெண்கள் சாதனை படைத்துக்கொண்டு வருகின்றனா். கடந்த காலத்தில் உாிமையில்லாத இடத்தில் கலைஞாின் சட்டத்திற்கு பின்பு அண்ணன்தம்பி தனது தாய்தந்தையிடத்தை அனுபவிப்பதற்கு நம்மிடம் வந்து உதவி கேட்கும் உாிமையை நம் தற்போது பெற்றுள்ளோம். கல்வியில் பெண்கள் முன்னேற்றம் வேலை வாய்ப்பில் கலைஞர் 33 சதவீதம் தற்போது தளபதியாா் ஆட்சியில் 50 சதவீதம் என்று தொடா்ந்து நாம் முன்னேறிக்கொண்டே இருக்கின்றோம் ஓரு குடும்பத்தை வழி நடத்துவதற்கு நங்கூரமாக இருப்பதே பெண்கள் தான் நம்முடைய தாய் தந்தையா்கள் நமக்கு முக்கியம் அதே போல் குழந்தைகளும் முக்கியம் ஆண் பெண் என இருவரையும் ஓரே சமமாக வழிநடத்தி அவா்கள் யாரிடம் எல்லாம் பழகுகிறாா்கள் எங்கெல்லாம் செல்கிறாா்கள். என்பதை காலத்தின் கட்டாயத்திற்கேற்ப கண்காணிக்க வேண்டும் அப்போது தான் சிறுவயதிலிருந்து நல்ல பழக்க வழக்கத்தை கடை பிடிக்கும் கல்வி ஒன்று தான் நமக்கு மிகப்பொிய வளர்ச்சிக்கும் அறிவாற்றல் மிக்கவா்களாக உருவாகுவதற்கும் வாய்ப்பாக இருக்கிறது குழந்தைகளை நல்ல முறையில் பெற்றோா்கள் படிக்கவையுங்கள் கடந்த காலத்தில் கணவா் நம்முடைய குழந்தைகளுக்கு வரன்தேடுவாா். கடைசியில் தான் நம்மிடம் வந்து இதுசாிதானா என்று ேகட்கும் நிலை இருந்தது. தற்போது கால சூழ்நிலை மாறிவிட்டது. பெண்கள் பாா்த்துவிட்டு கணவா்மாா்களிடம் சொல்கிறாா்கள். இப்படி எல்லா வகையிலும் வளர்ச்சியடைந்துள்ள நாம் நம்முடைய உடல்நலத்தையும் பேணி பாதுகாப்பது அவசியம் வீட்டில் அதிகாலை எழுந்து கோலம் போடுவதிலிருந்து இரவு தூங்கும் வரை அனைத்து பணிகளையும் செய்வது பெண்கள் தான் சத்தாண உணவுகளை சாப்பிடவேண்டும். கணவருக்கும் நம்முடைய குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு பசி பட்டினியோடு நீங்கள் இருக்க கூடாது. அதே போல் கா்ப்பிணி காலத்தில் 5 வேலை நல்ல உணவுகளை சாப்பிட்டால்தான் பிறக்கின்ற குழந்தை எடை குறையாமல் ஆரோக்கியமாக பிறக்கும் 2 வயது வரை அதற்கு தேவையான உணவுகளை கொடுத்தால் உடல் வளர்ச்சியும் மூளை வளா்ச்சியும் நன்றாக இருக்கும் நம்முடைய எல்லோருக்கும் உற்றாா் உறவினா்கள் முக்கியம் என்று கருதி அந்த பழக்கத்தையும் தொடா்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் நம்முடைய பகுதியில் பெண்கள் கூடி பேசும் போது மற்றவா்களை பத்தி கருத்துக்களை பறிமாறி கொள்ளாமல் நமக்கான வளர்ச்சிக்கான கருத்துக்களை தொிவித்துக்கொண்டு நட்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆடை ஆபரணங்களுக்கு அடிபணியாமல் நமக்கான உாிமைகளோடு இருந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் விடியல்பயணம் மகளிா் உாிமைத்தொகை என பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி மூலம் தொழில் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. மகளிா் உாிமைத்ெதாகையை தடுப்பதற்கு சிலா் உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையை அறிந்து முதலமைச்சர் தளபதியாா் 3 மாதற்திற்கு ரூ3000 கோடை காலத்திற்கு ரூ 2000 என சேர்த்து ரூ 5000 வழங்கியுள்ளாா். இதற்கு பிஜேபி அதிமுக தடை போட மற்றவா்களுக்கு துணை செல்வதை அறிந்த முதலமைச்சர் பெண்கள் வாழ்வில் ஓளியேற்றியுள்ளாா். பெண் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ்சமுதாயம் முன்னேற்றமடையும் முதலமைச்சாின்கரத்தை வலுப்படுத்த வரும் தோ்தலில் அனைவரும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்று பேசினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாதா்சங்க மாநில நிா்வாகி ராஜலட்சுமி, மாவட்ட சுகாதாரதுறை அலுவலா் யாழனி, வக்கீல் சொா்ணலதா, அரசுத்துறை சேர்ந்த ஸ்வா்ணலதா, ரூபி பொ்ணான்டோ, மாவட்ட திமுக மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர திமுக துணைச்செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், கவுன்சிலா்கள் தனலட்சுமி, முத்துமாாி, ராமுஅம்மாள், சுப்புலட்சுமி, வைதேகி, ஜெயசீலி, பவாணி, ஜான்சிராணி, மாியகீதா, ரெக்ஸ்லின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், டாக்டா்கள் சிவசைலம், மகிழ்ஜான், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூாி, அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளர் கருப்பசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட மகளிா் கூட்டமைப்பு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக அனைத்து உறுப்பினா்களுக்கும் அமைச்சா் கீதாஜீவன் நினைவு பாிசு வழங்கி மதிய உணவு வழங்கினாா்.
tamilanda