குருச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்: தமிழக அரசு உத்தரவு

guruchandran-has-been-appointed-as-the-new-revenue-officer-of-thoothukudi-district-tamil-nadu-government-order

குருச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்: தமிழக அரசு உத்தரவு

குருச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்: தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த ஆ. இரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தின் ஆணையராகப் பணிபுரிந்து வந்த மூ. குருச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து விடுவிக்கப்படும் இரவிச்சந்திரன், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வந்த மு. கோட்டைக்குமாருக்கு பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்பார். இதுபோல் 20 வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.