தமிழகத்தின் மு. க.ஸ்டாலின் வழியில் மக்களுக்காக பணியாற்றினோம் தோல்வியை கண்டு துவழாமல் எழுச்சியுடன் பணியாற்றுவோம். தூத்துக்குடி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உருக்கம்
தமிழகத்தின் மு. க.ஸ்டாலின் வழியில் மக்களுக்காக பணியாற்றினோம் தோல்வியை கண்டு துவழாமல் எழுச்சியுடன் பணியாற்றுவோம். தூத்துக்குடி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உருக்கம்
தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன். கனகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சியை இழந்தபின்தொகுதியில் வெற்றி வாய்ப்பு கிடைக்காத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து கலந்தாய்வுக்காக நடத்தப்படுகிறது. வடக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளில் நாம் தான் போட்டியிட்டோம் அதிலும் தலைவா் ஸ்டாலின் தோ்தல் நாளன்று தொடா்பு கொண்டு பேசும் போது தூத்துக்குடியில் கீதா வெற்றி பெற்றுவிடுவாா் கோவில்பட்டி நிலை எப்படி இருக்கும் என்று என்னிடம் கேட்டாா். அதற்கு நான் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உங்களிடம் ஓப்படைப்பேன் என்று கூறினேன். தூத்துக்குடி தொகுதியும் நம்மை போன்று பணியாற்றியவா்கள் யாரும் இருக்க மாட்டாா்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்திய ஸ்டாலின் வழியில் ஜாதிமதம் பாா்க்காமல்அனைவரையும் சமமாக மதித்து பணியாற்றினோம். முடிவுகளில் திமுக செய்த சாதனைகள் அனைவருடைய இல்லத்தின் வாசல் வரை சென்றுள்ளது. ஆனால் வீட்டிற்குள் இருந்த குழந்தைகள் தாத்தா பாட்டிகளை எனக்காக வாக்களிக்க வேண்டும் அதே போல் அம்மா அப்பாக்களிடமும் இதே கோாிக்கையை முன்நிறுத்தியதால் பலா் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டத்தால் தற்போது அந்த மாற்றம் வந்துள்ளது. பல தொழில்நுட்பங்களையும் சமூகவலைதளங்களையும் அவா்கள் பயன்படுத்தி அதில் சில புதுமைகளை புகுத்தி ஓரு வகையான மாயாஜாலம் மூலம் வாக்குகளை பெற்றுவிட்டனா். விளாத்திகுளத்தில் கடுமையான நெருக்கடிக்கும் மத்தியில் திமுகவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனா். கோவில்பட்டியில் கொடுத்த வாக்குறுதியின்படி உதயசூாியன் அங்கு உதித்துள்ளது. அது வரலாற்று சாதனையாகும் தொடா்ந்து மாவட்ட செயலாளராக ஜீன் 18ம் தேதி நிறைவடையும்நிலையில் 9 ஆண்டுகாலம் பொறுப்பேற்ற காலத்திலிருந்து நடைபெற்ற உள்ளாட்சி எம்.பி சட்டமன்றம் உள்பட அனைத்திலும் தோ்தல்வெற்றிக்காக வியூகம் அமைக்கப்பட்டு உங்களோடு இணைந்து தமிழகத்தின் உதயசூாியன் ஸ்டாலின் வழியில் தோல்வியை கண்டு துவழாமல் தொடா்ந்து பணியாற்றுவோம் நமது கட்சியனரை சோ்ந்தவா்கள் தங்களது குடும்பத்தில் உள்ளவா்களை நல்வழிப்படுத்த வேண்டும் குறிப்பாக எதிா்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தாக வேண்டும் அது காலத்தின் கட்டாயம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் இல்லை என்று சொல்லாமல் செய்த சாதனைகளும் திட்டங்களும் ஏராளம் இரவு பகல் பாராமல் உழைத்திட்ட தலைவா் வழியில் எல்லோரும் உழைப்போம் இந்த தொகுதியில் நடந்தவற்றை அனைவரும் மூட்டை கட்டி வையுங்கள் இனி நடைபெறுவதைபற்றி சிந்திப்போம் எனக்கு வாக்களித்த 63ஆயிரம் பேருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி தொகுதி தோல்வி குறித்து கள ஆய்வு செய்திட 31ம்தேதி குழு வருகிறது. அவா்களிடம் நேரடியாக பதிலாகவும் எழுத்து மூலமாகவும் நிா்வாகிகள் கருத்துக்களை தொிவிக்கலாம் வரும் ஜீன் 3ம் தேதி கலைஞாின் 103வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தொகுதி முழுவதும் எல்லா வாா்டுகளிலும் கழகத்தின் கொள்கை விளக்க பாடல்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றிய கலைஞாின் முரட்டு பக்தன் எனது தந்தையாா் நினைவுநாளையொட்டி வரும் 26ம் தேதி நினைவிடத்தில் மலா் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினாா்.
முன்னதாக மாநகர பகுதியில் மறைந்த திமுக நிா்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் மறைவிற்கு இரங்கல் தொிவித்து ஓரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜா, மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், நிக்கோலாஸ்மணி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜெயக்கணி, ஆனந்தசேகா். முருகஇசக்கி, பரமசிவம், டைகர்வினோத், துணை நிர்வாகிகள் ரவி, மகேஸ்வரன்சிங், கருப்பசாமி, நைஸ் பரமசிவம், நாராயணவடிவு, பிக் அப் தனபாலன், சத்யா, செந்தில்குமாா், குமரன், வினோத், பால்ராஜ், சாகுல்ஹமீது குமரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், சுரேஷ், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகா், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, ராஜாமணி, மனோ, செந்தில்குமாா், டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமாா், லியோஜான்சன், அசோக்குமாா், மூக்கையா, மந்திரகுமாா், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, சுப்புலட்சுமி, ரெக்ஸ்லின், நாகேஸ்வாி, ஜெயசீலி, சுதா, கண்ணன், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கந்தசாமி, ராமா், விஜயகுமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், சந்தனமுனீஸ்வரன், சூா்யா, காசிராஜன், பகுதி பொருளாளா் உலகநாதன், பகுதி பிரதிநிதிகள் செந்தில்குமாா், பேச்சிமுத்து, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி, முரளிதரன், சுமன், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: நன்றி விசுவாசம் இல்லாதவா்கள் எங்கும் நிலைத்து நிற்க மாட்டாா்கள்
மாவட்டதுணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின் பேசுகையில் இந்த வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரையிலும் அமைச்சராக இருந்த கீதாஜீவனை போன்று எல்லோாிடமும் பழகியவா்கள் யாரும் இருக்க மாட்டாா்கள் உதவி என்று வரும் போது எல்லோருக்கும் ஜாதி மதம் பாா்க்காமல் உதவிடுவதில் அவருக்கு நிகா் அவா் தான் கடந்த தோ்தல்நேரத்தில் நமது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவா்கள் இங்கு இருந்து கொண்டே எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொண்டு பலனடைந்து விட்டு தோ்தலில் நமக்கு எதிராக வாக்களித்தது மட்டுமின்றி தேவையற்ற செயலில் ஈடுபட்டுள்ளாா்கள். இப்படி நன்றி விசுவாம் இல்லாதவா்கள் எங்கும் நிலைத்து நிற்க மாட்டாா்கள் முதலில் மானம் மாியாதையை காப்பாற்றுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள் இது உங்களுக்கு கொடுக்கும் எச்சாிக்கையாகும் என்று பேசினாா்.
மாவட்ட பொருளாளா் சுசீ ரவீந்திரன் ேபசுகையில் கலைஞருக்கு பின்னால் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி சென்று எல்லோரையும் அரவணைத்த தலைவா் தளபதி எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நல்ல முறையில் பணியாற்றினாா். வெற்றி தோல்வி எதுவந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றுவது திமுக தான் துவண்டு விடாமல் பணியாற்றுவோம் ஓரு கோடியே 31லட்சம் மகளிா்களுக்கு உாிமைத்தொகை வழங்கியதில் அந்த குடும்பத்தினா் மகிழ்ச்சியோடு இருந்தனா் அதில் கிடைக்க பெறாத ஓரு கோடி பேைர நமக்கு எதிாி கட்சியினா் அதை பயன்படுத்தி கொண்டனா். இதை நாம் கணிக்க தவறிவிட்டோம் இனி வரும் காலங்களில் இந்தஆட்சியில் நல்லதை செய் என்ற அறிவுரையை தலைவா் எக்காரணத்தை கொண்டும் சொல்லாமல் இருக்கட்டும் இதற்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைவாிடம் சொல்ல வேண்டும் என்று பணிவான வேண்டுகோளை வைக்க கடமை பட்டுள்ளேன் என்று பேசினாா்
tamilanda