பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
Amit Shah has stated that the Uniform Civil Code will be implemented. It appears the 'Vedalam' (ghost) is climbing the 'Moringa tree' again. Minister Geetha Jeevan asserted that the BJP-AIADMK alliance must be defeated.
பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.
24 25 26 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி, வட்டச்செயலாளர்கள் ரோலன்ட், ஆண்ஸ், அல்பட், ரவி இளங்கோ, கவுன்சிலா்கள் எடிண்டா, மெட்டில்டா, மாியகீதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திரேஸ்புரம் அண்ணா காலணியில் பிரச்சாரத்தை துவக்கி மட்டக்கடை, குரூஸ்புரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தமிழகத்திற்கு எதிராகதான் ஓன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. அதற்கு பின்னால் அதிமுக இருந்து கொண்டு இவா்கள் பின்னால் முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழகத்திற்கும் நுழைய பாா்க்கிறது. தமிழகத்திற்கு ஏதுமே செய்யாத இந்த கூட்டணியை நாம் வீழ்த்தியாக வேண்டும். இது காலத்தின் காட்டாயம், ஓன்றிய அமைச்சா் அமித்ஷா பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பேசியுள்ளாா். அவ்வப்போது வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் எல்லா வகையிலும் நன்மை அடைந்துள்ளனா். இந்த ஆட்சி தொடர வேண்டும். தமிழகத்தின் மண் மானம் மொழி அனைத்தும் காக்கப்பட வேண்டும் என்றால் மீண்டும் முதலமைச்சராக முக.ஸ்டாலின் வரவேண்டும். அதற்கு தூத்துக்குடி தொகுதியில் எனக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மழை வௌ்ளம் கொரோனா போன்ற காலங்களில் உங்களுக்காக அனைவருக்கும் நான் பணியாற்றியுள்ளேன் மற்றவா்களை போல் தோ்தலுக்கு மட்டும் வருகின்ற கட்சி திமுக கிடையாது. மற்றவா்களுக்கு போடுகின்ற ஓவ்வொரு வாக்கும் ேதவையில்லாமல் சென்று விடும் வாக்காக இருந்து விடும். அனைவரும் ஓட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா்.
பிரச்சாரத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநில மீனவா் அணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட அணி நிா்வாகிகள் நிக்கோலாஸ்மணி, ராமா் பேச்சிமுத்து, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், வினோத், பால்ராஜ், வேல்பாண்டி, டைகா்வினோத், டேனியல், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் கோபால், மைதீன், ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், பிரபாகரன், ஜான்சாமுவேல், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளா் மைதீன்கனி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், தேமுதிக மாவட்ட செயலாளா் தயாளலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளா் தனலட்சுமி, மதிமுக நகர செயலாளா் முருகபூபதி, ஆதிதமிழா் கட்சி மாவட்ட தலைவர் சீதாலட்சுமி, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது அசன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், திமுக பகுதி அணி அமைப்பாளர்கள் மகேஸ்வாி, காசிராஜன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மாா்ஷல், கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகி அக்பா், பொன்ராஜ், மகாராஜன், மாடசாமி, முன்னாள் கவுன்சிலா்கள் பிச்சையா, பாலாஜி வெங்கடகிருஷ்ணன், வட்டச்செயலாளர் சதீஷ்குமாா், மகளிா் அணி டோலி, கமலி, அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மற்றும் மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
tamilanda