மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி பேட்டி.!

மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி பேட்டி.!

மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி பேட்டி.!

     தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக கல்வித்துறையில் மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது. மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார். மாணவர்களின் உயிர் மற்றும் எதிர்காலத்துடன் விளையாடும் நிலை உருவாகியுள்ளது நீட் தேர்வுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால் தேர்வு மையங்களுக்கே ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கண்டித்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும். நீட் தேர்வு தொடர்பான மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளால் 12 பேர் உயிரிழந்துள்ளனர் ஆனால் இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை சட்டசபையில் எங்களால் தான் நீங்கள் ஆட்சி அமைத்தீர்கள் என்று உதயநிதி கூறியதற்கு முதலமைச்சர் விஜய் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

விஜயை வாழும் காமராசர் என்று கூறியதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் திருச்சி சிவா, முக்தார் உள்ளிட்டோர் காமராஜரை இழிவாக பேசியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது திமுக அமைதியாக வேடிக்கை பார்த்தது. காமராஜர் பற்றி தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் பேசுவது வெட்கக்கேடானது.. அடுத்த மாதம் காமராஜர் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் திமுகவினர் மாலை அணிவிக்க வரக்கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிப்பது தவறல்ல. வருவாய் வர வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ஆ.ராசாவின் கருத்துக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, வாங்கியவர்களுக்கும் வெட்கமில்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார். 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடையவராக விமர்சிக்கப்பட்டவர் இன்று மற்றவர்களை பற்றி பேசுகிறார். திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது, பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது. தற்போது மீண்டும் பாஜகவுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். நல்லது செய்ய வெட்கப்படுவது திமுகதான் என்று கூறினாா்.