கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன் அப்போது அங்கு பார்த்தேன் 250 லாரிகள் வரிசையாக நிற்கிறது . அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பரபரப்பு பேட்டி.
கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன் அப்போது அங்கு பார்த்தேன் 250 லாரிகள் வரிசையாக நிற்கிறது . அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பரபரப்பு பேட்டி.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்களுடைய தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் உத்தரவின் படி தமிழகத்தில் ஐந்து ஆண்டு காலம் திராவிட மாடலாச்சி செய்த சாதனைகளை தெருமுனைப் பிரச்சாரத்தின் மூலம் எடுத்து மக்களிடம் சொல்ல உள்ளோம். இந்த ஆட்சி அமைப்பதற்கு காரணமாக இருந்த வாட்ஸ் அப் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளோம் திமுக ஆட்சியில் அங்கு கொலை நடந்தது இங்கே கொலை நடந்தது என்று தற்போதைய முதலமைச்சர் கூறினார். இப்போது கோவையில் நடந்த சம்பவம் என்ன சென்னையில் நடந்த சம்பவம் என்ன தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் கொலை கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது. கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் தூங்கிக் கொண்டு உள்ளாரா? மக்கள் மன்றத்திலே தற்போது கேள்வி கேட்கப்படுகிறது. புதியதாக கட்சி ஆரம்பித்தவர் கட்சி காரர்களே ஆதவ் அர்ஜினா கைப்பற்றி விடுவாரோ என்று பயம் உள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு குடும்பம் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு அறிக்கையும் ஆதவ் அர்ஜுனா பெயரில் தான் வருகிறது. மீண்டும் தமிழகத்தில் ஆட்சி சீட்டு வந்து விடுமோ என்று ஒரு அச்சம் உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் ஆன்லைன் மூலம் 100 ரூபாய் தரிசன டிக்கெட்டில் பல மோசடி நடைபெற்று உள்ளது இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த சம்பவத்தை நாங்கள் எடுத்து மக்கள் மத்தியில் சொல்ல உள்ளோம். நான் கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன் அப்போது அங்கு பார்த்தேன் 250 லாரிகள் வரிசையாக நிற்கிறது என்ன என்று கேட்டேன் மூன்று நாட்களாக நிற்கிறோம் அதிகாரிகள் கண்டு கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறினார். தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் தமிழக முதலமைச்சர் சோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்று தனி சட்டத்தை உருவாக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்படுகிறார் என்று தெரிய வருகிறது. அனுமதி சீட்டு பெற்று தான் அங்கு தொழில் நடைபெறுகிறது கேரளா என்பதை இந்தியாவின் ஒரு மாநிலம்தான் அதனை பிரச்சனைகளை பேசி தீர்க்க தான் வேண்டும். முன்னாள் அமைச்சர் என்ற முறையில் இதனை நான் அரசாங்கம் இருக்கிறதா? தூங்குகிறதா? என்று தெரியவில்லை. லண்டன் சீனாவில் இருந்து ஒரு பொருள் வருது என்றால் அது நமக்குத் தேவை அதனால் தான் இங்கு வருகிறது. கேரளா இந்தியாவில் ஒரு மாநிலம் தான் தமிழகத்தில் உற்பத்தியாகிற காய்கறிகள் எல்லாம் கேரளாவில் தான் அதிக விற்பனை செய்யப்படுகிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை பேசி தீர்க்க வேண்டும். தற்போதைய தமிழகத்தில் ஆட்சி செய்யும் தமிழக வெற்றி கழகம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஆட்சி மகளிர் வழங்கும் ஆயிரம் ரூபாயை நாங்கள் 2500 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அதனை கூட ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வற்புறுத்தியதின் அடிப்படையில் தான் தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது மீனவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றால் கொடுப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது மாமன் சீர் பெண்களுக்கு பட்டுச்சேலை பெண்கள் தமிழகத்தில் எந்த ஊர்களுக்கும் இலவசமாக செல்லும் பஸ் இதையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை கேள்விக்குறியாகவே உள்ளது சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி கேட்கும் போது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலைமை அவர்களுக்கு உள்ளது. எனது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அமலாக்கத்துறை எந்த ஒரு நோட்டீஸும் வழங்கவில்லை நெருக்கடியும் கொடுக்கவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் தலைவர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சாதாரண ஒரு தொண்டன் கூட நிறுத்தப்படுவார் அப்படி நிற்கும் பட்சத்தில் திமுக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். கூட்டணி கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தது அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதியதாக பொறுப்பேற்றுள்ள கால்நடைத்துறை அமைச்சர் நல்ல முறையில் செய்வார் என்று நான் நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ரேஷன் கடைகள் உள்ளிட்ட அரசு அலுவலகத்தில் சாதாரண நிர்வாகிகள் கூட ஆய்வு மேற்கொள்கிறார்கள் ஆய்வு செய்ய சொல்லி ஆதவ் அர்ஜுனா சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பார் என்று முன்னால் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
tamilanda