திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழா : கூட்டாம்புளி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கல்
dmk-state-youth-wing-deputy-secretary-s-joel-thoothukudi-birthday-celebration-food-distribution-at-koottampuli-orphanage
திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழா : கூட்டாம்புளி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கல்

ஏரல்,2026 மார்ச் 16 :
திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்த நாளை முன்னிட்டு கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தி.மு.க. சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி சத்யா சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்சேகர் தலைமை வகித்து உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சன்னியாசி, திமுக மாவட்ட பிரதிநிதி பேய்குளம் ஜெயக்குமார்,ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணன், டியோடின் ஐசக், தினகரன், செல்வம், சிவத்தையாபுரம் பாலகிருஷ்ணன், சுதன், அருண், அஜய் முடிவைத்தானேந்தல் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்சேகர் செய்திருந்தார்.
தூத்துக்குடி எஸ்.ஜோயல் அவர்களின் பிறந்தநாளில் காது கேளாத குழந்தைகளுக்கும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தினகரன்,டினோ,தினேஷ்,வள்ளி கண்ணன்,அபியுத்,நோபுள், அபிமன்யு,ஆகியோர் கலந்து கொண்டனர்
tamilanda