தூத்துக்குடியில் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த ஸ்டெர்லைட் காப்பர் 1 கோடி மதிப்பிலான சிஎஸ்ஆர் உதவியை வழங்கியது
sterlite-copper-provided-csr-assistance-worth-indian-rupee1-crore-to-strengthen-the-livelihoods-of-coastal-communities-in-thoothukudi
தூத்துக்குடியில் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த ஸ்டெர்லைட் காப்பர் 1 கோடி மதிப்பிலான சிஎஸ்ஆர் உதவியை வழங்கியது
தூத்துக்குடி வேதாந்தா லிமிடெட்டின் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன், துல்லியமான மற்றும் தொடர்ச்சியான பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்புகள் வாயிலாக, தூத்துக்குடியின் கடலோரச் சமூகங்களை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தனது தொடர்ச்சியான சமூக மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம் ₹1 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது இதன் மூலம் கடலோரச் சமூகங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்களைச் சாத்தியமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பான மற்றும் திறமையான சங்குக் குளித்தல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில், சுமார் ₹20 லட்சம் மதிப்பிலான 30 ஸ்கூபா டைவிங் சிலிண்டர் தொகுப்புகளை ஜாக்கெட்டுகள் மற்றும் ரெகுலேட்டர்கள் உட்பட ஸ்டெர்லைட் காப்பர் விநியோகித்தது. பயனாளிகளுக்கு இந்த உதவிகள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், 'ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சங்குக் குளித்தல் தொழிலாளர் நலச் சங்கம்', 'தூத்துக்குடி மாவட்ட கடலரசர் சங்குக் குளித்தல் தொழிலாளர் நலச் சங்கம்' மற்றும் 'தூத்துக்குடி மாவட்ட நவீன முறை சங்குக் குளிப்போர் நலச் சங்கம்' உள்ளிட்ட மீனவச் சங்கங்கள் வாயிலாக இந்த முன்னெடுப்பு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
மீன்பிடித் தொழிலை மேலும் வலுப்படுத்தும் வகையில், ₹50 லட்சத்திற்கும் அதிகமான மொத்த மதிப்பிலான 170-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலை உபகரணத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன. உள்ளூர் மீனவர்களுக்கு இந்த உதவிகள் சென்றடைவதை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றிய 'தூத்துக்குடி மாவட்ட சிந்தா யாத்திரை மாதா ஃபைபர் நாட்டுப்படகு மீனவர் நலச் சங்கம்' மற்றும் 'தோமையார் சாலை வலைச் சங்கம்' ஆகியவற்றின் ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த உதவி, மீன்பிடித் திறனைப் பெருமளவில் மேம்படுத்தவும், வருமான நிலைத்தன்மையை உறுதி செய்யவும், நிலையான மீன்பிடி நடைமுறைகளைச் சாத்தியமாக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்வாதார உதவிகளுக்கு அப்பால், தலா ₹1,500 மதிப்பிலான மளிகைத் தொகுப்புகளை விநியோகிப்பதன் மூலம், அத்தியாவசிய நலத்திட்ட உதவிகளையும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விநியோகப் பணி, 'ஜனநாயக சங்குக்குளி சங்கமம்', 'அலையோசை சங்குக்குளிப்போர் நலச்சங்கம்' மற்றும் 'தூத்துக்குடி மாவட்ட சங்குக்குளிப்போர் நலச்சங்கம்' ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது; இதன் மூலம், தேவைப்படும் குடும்பங்களுக்குப் பொருட்கள் சீராகவும், திறம்படவும், நேரடியாகவும் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது.
இந்த முன்னெடுப்பு குறித்து –தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுமதி பேசுகையில் "வேதாந்தாவின் 'சமூகமே முதன்மையானது' என்ற தத்துவத்தாலும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய எங்கள் தலைவரின் தொலைநோக்குப் பார்வையாலும் வழிநடத்தப்பட்டு, தூத்துக்குடி மக்களின் நலனுக்காக நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இப்பிராந்தியத்துடனான எங்கள் உறவு, நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மை ஆகிய வலுவான அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பின் ஆணிவேராகத் திகழும் கடலோரச் சமூகத்தினர், எங்கள் நலப்பணிகளின் முன்னணியில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். தொடர் நலத்திட்டங்களின் வாயிலாக இச்சமூகங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளோம் வரும் தலைமுறையினருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும், வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று கூறினார்.
tamilanda