நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

    தூத்துக்குடி இந்தியாவின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கில், அளவுக்கு அதிகமாக தங்க வாங்குதல், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் அதிகமான தனியார் வாகன பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதையடுத்து பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது 

       இந்தியா உலகில் அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளில் இருந்து தான் வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படுகிறது.ஒரு குடும்பத்தில் வருமானத்தை விட அதிகமாக ஆடம்பர செலவுகள் செய்தால் கடன் சுமை வரும். அதுபோல ஒரு நாடும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் வாங்கி, அதற்கான பணத்தை வெளியே அனுப்பினால் பொருளாதார சிக்கல்கள் உருவாகும். தங்கம் வாங்குவது தவறு அல்ல. ஆனால் தேவைக்கு அதிகமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்தால், அந்த பணம் தொழில் வளர்ச்சி, தொழிற்சாலை, விவசாயம், சிறு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளுக்கு செல்லாமல் முடங்கிவிடுகிறது. அதே பணம் வங்கிகளில் சேமிக்கப்பட்டால், வங்கிகள் அதை கடனாக வழங்கி புதிய தொழில்கள் உருவாக உதவ முடியும். மேலும், தேவையற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணங்களையும் குறைக்குமாறு பிரதமர் கூறியுள்ளார். காரணம், வெளிநாடு செல்லும் போது அங்குள்ள ஹோட்டல், உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட அனைத்திற்கும் டாலர் போன்ற அன்னிய நாணயங்களில் செலவு செய்ய வேண்டியுள்ளது அதேபோல், மக்கள் தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்து பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகமாக தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படும் போது, அதிக எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. உதாரணமாக, ஒரே பேருந்தில் 50 பேர் பயணம் செய்தால், 50 இருசக்கர அல்லது கார் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் மிச்சமாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கவும், விலைவாசி கட்டுக்குள் இருக்கவும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் நாட்டின் பொருளாதாரம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக மக்கள் சிக்கனத்தையும், பொறுப்புணர்வையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்” என்று மோடி தெரிவித்துள்ளார் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்னபூா்னா கூறியுள்ளாா்.