2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.
minister-geethajeevan-presented-the-national-girl-child-day-state-government-award-for-the-year-2025-2026-to-tirunelveli-student-soodamani
2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.
தூத்துக்குடி தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இவ்விருதை வழங்குவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 2025– 2026ம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துருக்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, சமூக முன்னேற்றத்திற்காக தனது சமூக சிந்தனை புத்தகங்கள் மூலம் சிறப்பாக பங்காற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சூடாமணி த.பெ.முத்துகுமார் 2025– 2026ம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
சூடாமணி இளம் எழுத்தாளர் என்பதோடு சமூக மாற்றங்கள், இயற்கை பாதுகாப்பு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், மற்றும் சமூக மாற்றத்திற்காகவித்திட்ட பெண்களைப் பற்றிய சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதி, சமூக சிந்தனைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு அமைச்சர் கீதாஜீவன் தேனாம்பேட்டை ஹோட்டல் மரியாட்டில் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். இந்த மாநில அரசு விருது, பெண் குழந்தைகளின் சமூகப் பங்களிப்பை அரசுத் தரப்பில் அங்கீகரிப்பதோடு, மற்ற பெண் குழந்தைகளுக்கும் முன்னுதாரணமாக இருந்து சமூக முன்னேற்றப் பணிகளில் பெண் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் ஈடுபட ஊக்கமளிக்கும் வகையில் அமைகிறது.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், சமூக நலத்துறை இயக்குநர் சங்கீதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
tamilanda