நாய் குரைத்ததால் தகராறு: கல்லால் தாக்கிய அண்ணன், தம்பி கைது!

Spread the love

ஸ்ரீவைகுண்டம் அருகே நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் அதன் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பாலமுருகன் (40) என்பவரது வீட்டின் முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த காசி என்பவரது மகன்கள் முத்துமகேஷ் (22) மற்றும் அவரது சகோதரர் சிவா (24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பாலமுருகனின் வளர்ப்பு நாய் அவர்களை குரைத்துள்ளது.

இதனையடுத்து நாய் மீது எறிந்த கல் பாலமுருகனின் வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதுகுறித்து பாலமுருகன் அவர்களிடம் கேள்வி கேட்டபோது ஆத்திரமடைந்த முத்துமகேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரும் பாலமுருகனை தவறாக பேசி கல்லால் தாக்கியும், காலால் உதைத்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாலமுருகன் நேற்று அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரேணுகா வழக்கு பதிவு செய்து முத்துமகேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *