தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 10ஆம் நாளன்று உலக மனநல தினமாக அனுசரிக்கபட்டு வருகிறது.
இந்தாண்டும் தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி மகளிர் கல்லூரியின் உளவியல் துறை மற்றும் சிருஷ்டி மனநல ஆலோசனை மையம் சார்பில் விழிப்புணர்வுக்காக மிதிவண்டி பேரணியை நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சிருஷ்டி மனநல ஆலோசனை மையத்தையும் திறந்து வைத்தார்.
பேரணி நிகழ்வில் தூய மரியன்னை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜாய்சிலின் சர்மிளா, பேராசிரியர்கள், மாணவியர்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அலெக்ஸ், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகர், ஜெஸ்பர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.