கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழர்கள் தமிழர்களாக இருப்பதில்லை, தமிழர் பண்பாடுகள் மறைந்து கொண்டிருக்கிறது அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் ஏற்கனவே அரபு நாட்டு உணவுகளான பரோட்டா பிரியாணி இரண்டும் மிகப்பெரிய ஆக்கிரமத்தை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது குறிப்பாக தூத்துக்குடியில் 6000 பரோட்டா கடைகள் இருக்கிறது நான்காயிரம் பிரியாணி கடைகள் இருக்கிறது 200 இட்லி கடைகள் இருக்கிறது எவ்வளவு கேவலமாக இருக்கிறது தமிழர் உணவுகளை அழித்து விட்டீர்கள் சைனா உணவுகளான பிரைட் ரைஸ் நூடுல்ஸ் போன்றவை இளைஞர்களின் உணவாக மாறிவிட்டது பாம்பே உணவுகளான பல் பூரி பாணி பூரி இது போன்ற உணவுகளும் தமிழனை அழித்துக் கொண்டு இருக்கிறது இதைப்போல மேற்கத்திய உணவுகள் எல்லாம் தமிழர் உணவுகளை அழித்து அதில் பஞ்சு மெத்தையில் துள்ளி விளையாடுகிறது அதற்கு தமிழர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம் அதற்கு அடுத்தார் போன்று பாரம்பரிய மருத்துவத்தை அழித்து விட்டோம் அவை இன்று கொரோனா காலத்தில் மட்டும் கபசர குடிநீர் என்று குடித்தோம் அதற்குப் பிறகு மறந்து விட்டோம் எல்லாம் மேற்கத்திய பண்பாடுகளை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் அதற்கு பிறகு பார்த்தால் தமிழர் கலைகள் முழுமையாக 80 சதவிகிதம் அளித்து விட்டார்கள் கேரளா செண்டை மேளத்தை அடிக்க தொடங்கி விட்டனர் மூளை முடுக்கு எல்லாம் பகுதியிலும் இந்திக்காரர்கள் உடைய நாசிக் டோல் தூத்துக்குடியை குறிப்பாக கிறிஸ்துவ பெருமக்களை அதிகம் குறி வைத்து அவை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் இதிலும் தமிழன் வீழ்ந்து விட்டான் இதனால் தமிழர் கலைகள் அழிந்து விட்டது இந்த நிலையில் தமிழன்டா இயக்கமானது தமிழர் கலைகளை வாழ வைப்பதற்காக அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் தமிழன்டா இயக்கம் கலைக்குழு கலைக்கூடம் தனது கலை பயணத்தை மிகப் பிரமாண்டமான முறையில் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள் ஆனால் தூத்துக்குடியில் உள்ள ஜேசிஐ பியர்ல் சிட்டி என்ற ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிளப் என்ற சொல்ல கூடிய சங்கத்தினர் தமிழர் கலைகளை வெறுக்க தொடங்கி இருக்கிறார்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்கது அவர்கள் நடத்தக்கூடிய போட்டிகளில் தமிழர் கலைகளைத் தவிர்த்து மாற்று மாநில கலைகளை போட்டிகளில் பங்கெடுக்க மாணவர்களை அழைத்து இருக்கிறார்கள் இது வேதனையான விஷயம் தமிழர்களாக இருந்து கொண்டு இப்படி தமிழர் கரைகளை அழிக்கலாமா இந்த போட்டிகளை பயன்படுத்துவதில் தமிழர் கலைகளை பயன்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தனையை தெளிவுபடுத்த விரும்புகிறோம் தமிழ்நாட்டில் தமிழர் கலைகளை புறக்கணிக்கும் சங்கங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள் இதுகுறிப்பு கலை போட்டிகள் நடைபெறும் அன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளனர்*