அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Spread the love

தூத்துக்குடி அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்ல பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) தூத்துக்குடி டூவிபுரம் 9-வது தெருவில் உள்ள கழக வர்த்தகஅணி அலுவலகத்தில் கழக கொடி ஏற்றி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செல்லப்பாண்டியன்; தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், தூத்துக்குடி மாவட்ட மீனவணி தலைவர் டெலஸ்பர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எட்வின் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் காயல் அன்வர், காயல் பட்டினம் முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் வட்ட செயலாளர் தெர்மல் முருகேசன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், சாத்தான்குளம் ஒன்றியம் பண்டாரபுரம் ஊராட்சி கழக செயலாளர் இரா.ஜெகந்நாதன் மற்றும் கிளை செயலாளர்கள் ஐக்கோர்ட் துரை, பிச்சைக்குளம் முக்கண்ணன், ராமச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி சுப்பிரமணியன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லர் ராஜா, ஜெகதீஸ்வரன், அருண்குமார், அந்தோனி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், பெருமாள் தாய், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் ஹெய்னஸ், ரத்தினம், சிக்ஸ்ட்டன், கோட்டாள முத்து, பாபநாசம், சகாயராஜ், மாரியப்பன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட், ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜேசுராஜ், பாலன் மற்றும் ஸ்டாலின், மாடன், சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், போர்ட் ட்ரஸ்ட் ராஜ் குமார், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஜோதிகா மாரி, ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, புங்குராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய் கணேஷ், முனியசாமி, மகளிர் அணியினர் ஜேடி அம்மா, பிலோமினா, பாப்பா, சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், தயாவதி, ஜெகஜோதி, சாய் சுதா மற்றும் அதிமுகவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி விழாக்கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *