கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் தீபாவளி விற்பனை சூடு பிடித்தது பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகைதூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை களைகட்டியுள்ளது. ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் பிரபலமான கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிகடை தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. இங்கு பெண்கள், ஆடவர்களுக்கான ஆடைகள் குவிந்துள்ளன. பிரபல நிறுவனங்களின் ஷூட்டிங், சர்டிங், துனி வகைகள், மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது டிசைன்களில் ரெடிமேட், பேண்ட் சர்ட் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் ஜவுளிகளுக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான ஜவுளி வகைகளும் ஒரே இடத்தில கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தோடு வந்து ஆர்வமுடன் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்.