தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருந்தியல் துறை சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது.

Spread the love

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கு சிவகுமார் அவர்கள் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகள் பற்றி விளக்கினார்.துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி, மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

புற்றுநோய் மருந்தியல் துறை இணை பேராசிரியர் மருத்துவர் காந்திமதி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் பற்றி உரையாற்றினார். மருத்துவர் கலா ராணி மார்பகப் புற்றுநோய் சிகிச்சை முறை மற்றும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை உற்சாகப்படுத்தினார். புற்றுநோய் கதிரியக்க துறையின் பேராசிரியர் மருத்துவர் லலிதா சுப்பிரமணியம், மருத்துவர் அமுதன் ஆகியோர் உரையாற்றினார். மருத்துவர் ராஜவேல் முருகன் மருத்துவர் ராகேஷ் பெர்னான்டோ மருத்துவர் மெர்சி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் உதவி மருத்துவர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

மார்பக புற்றுநோய் சிகிச்சை செய்து மீண்ட நோயாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.நாட்டுப் பண்னுடன் விழா இனிதே முடிவடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *